சேலம், ஜூலை 25- நீட் எதிர்ப்பு பரப்பரைப் பயணம் 14ஆம் தேதி இரவு அரூர் வருகை தந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அரூர், மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி, பயர் நத்தம், வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி வரை சென்று சேலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் வரை சென்றடைந்தது.
மூன்றாம் அணியின் பயணக் குழு ஒருங்கிணைப் பாளர் வேலு, பயண குழுத் தலைவர் வழக் குரைஞர் தா.தம்பி பிர பாகரன், தலைமை கழக அமைப்பாளர் இளந்திரை யன், கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி குழுவினரோடு நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.ராஜேந்திரன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் இ.சமரசம், சூர்யா திருவள்ளுவன், ஹரிகரன் வெங்கடசமுத்திரம் சாய்குமார் அரூர் ஒன்றிய தலைவர் சோலை துரைராஜ், அம்மா பேட்டை மணி உமா, வேப்பநத்தம் கல்பனா, சிந்தல்பாடி பச்சையப்பன் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
அரூர் கழக மாவட்டத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் பரப்புரையில் பங்கேற்றோர்
Leave a Comment