ஆதார், பான் மற்றும் பிறப்பு சான்றிதழ்: முக்கிய அறிவிப்பு

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 25- நம் அன் றாடம் பயன்படுத்தும் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும் பிறப்புச் சான் றிதழில் பெயர் சேர்ப்பு பான் கார்டு விண்ணப்பிப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் புதிய வரைமுறையை வகுத்துள்ளது.
முதலாவதாக ஆதார் கார்டு மூலம் நடக்கும் திருட்டு உள்ளிட்ட வைகளை தடுப்பதற்காக யூடிஅய் புதிய அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் ஒரே ஆதார் கார்டு பயன்படுத்தி வந்தால் அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கான கால அவகாசமானது செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை கொடுத் துள்ளனர்.

மேற்கொண்டு தங்களது தனிப்பட்ட திருத்தங்களை அடுத்த ஆண்டு முதல் திருத்திக் கொள் ளலாம் என்றும் ஆனால் இந்த புதுப்பித்தலை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள் ளுமாறு கூறியுள்ளனர்.

பிறப்புச் சான்றிதழ்
பெயர் பதிவு

2000ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்வ தற்கான கால அவகாசமானது. இந்த ஆண்டு டிசம்பர் வரை கொடுத்துள்ளனர். தற்பொழுது 5 மாதங்கள் உள்ள நிலையில் பெயர் இல்லாத சான்றிதழ்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். மேற்கொண்டு இவ்வாறான கால அவகாசம் கொடுக்கப்படாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பான் கார்டு விண்ணப்பித்தல்

ஆதார் அட்டை எவ்வளவு முக்கி யமான ஒன்றாக மாறியுள்ளதோ அதேபோல தான் பான் கார்டும். சிறு சிறு கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பிக்கும் வசதியானது வந்து விட்டது. இதனால் பல மோசடி நடப்பதாகவும் விரைவில் இதற்கென்று தனி மய்யம் அமைப்ப தாகவும் ஒன்றிய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

ஆதார் அட்டை பெறுவதற்கு என்று தனி மய்யம் செயல்பட்டு வருவது போல பான் கார்டு பெறுவதற்கும் இதுபோல ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறி யுள்ளனர்.

இவ்வாறு மூன்று முக்கிய அடையாள ஆவணங்கள் குறித்த அறிவிப்புகளை ஒன்றிய மற்றும் மாநில அரசு கள் வெளியிட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *