கருநாடகா அளிக்கும் நீரின் அளவு கண்காணிக்கப்பட வேண்டும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தல்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 25 காவிரி ஆற்றில் கருநாடக அரசு திறந்துவிடும் நீரின் அளவை கண்காணிக்க வேண்டும் என டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32ஆவது கூட்டம் டில்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலை மையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில் நுட்ப குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருநாடகா, கேரளா, புதுச்சேரி சார்பில் அம்மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது கருநாடக அரசின் சார்பில், ‘‘காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகரு, கபினி உள்ளிட்ட 4 அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கி யுள்ளன. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப் பின்படி தமிழ்நாட்டு காவிரி நீர்முறையாக திறக்கப்பட்டுள்ளது”என தெரிவித்தனர்.

இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ‘‘இதுவரை கருநாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் முறையாக வந்து கொண்டி ருக்கிறது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி நீரைகருநாடகா வழங்க வேண்டும். இதனை மேலாண்மை ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத் தில் 45 டிஎம்சிநீரை திறந்து விட வேண்டும்” என வலியு றுத்தப்பட்டது. இறுதியில் பேசிய ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர்,‘‘நீரின் அளவை கண்காணிப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளுக்கும் வழி காட்டுதல்கள் வழங்கப் படும். ஜூலை 30ஆம் தேதி நடக்கும்காவிரி ஒழுங் காற்று குழுக்கூட்டத்தில் அது தொடர்பான விவரங்களை இரு மாநில அரசுகளும் தெரி விக்கலாம்” என்றார்.
இதனிடையே, கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கவில்லை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கருநாடக அரசு புதிய அணை கட்டு வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதா? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய நீர் ஆணையம், அவ்வாறு எந்த அனுமதியும் கருநாடக அரசுக்கு வழங் கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *