அடுத்து வெற்றி பெறப்போவது ‘இந்தியா’ கூட்டணியே இந்திய மண்ணில் சனாதன சக்திகளுக்கு இடம் இல்லை எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்

2 Min Read

அரசியல்

தூத்துக்குடி, ஆக. 17- தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந் தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினரு மான தொல்.திருமாவளவன் கூறியதா வது:

“நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேத னையளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக் கிறது. பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாண வர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை ஜாதிய, மதவாதி களாக மாற்றும் கருத்துகளை பரப்பும் அமைப்புகளைக் கண்காணிக்க வேண் டியதும், அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதும், தமிழ்நாடு அரசின் பொறுப்பு.

ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆணையம், நாங்குநேரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் கல்வி நிறு வனங்களில் நிலவும் இது போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அரசுக்கு உரிய வழிகாட்டு தல்களைத் தர வேண்டும். இந்தியா கூட்டணி அமைந்ததிலிருந்து பா.ஜ.க-வினருக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது. பிரதமர் மோடி பயந்து போயிருக்கிறார். எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்று சேர்வார்கள் எனக் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். அதற்கு வாய்ப்பில்லை என்ற எண்ணத் தோடு இருந்த வருக்கு அனைத்து எதிர்க் கட்சியும் சேர்ந்து ’இந்தியா’ என்ற கூட்டணியை அமைத் தது காலத் தின் தேவையாக இருக்கிறது. 

இந்தக் கூட்டணி உ ரு வான நாளிலிருந்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் வாய்க்கு வந்தபடி பிதற்றிக்கொண்டி ருக்கிறார்கள். எது பேசினாலும் எதிர்க் கட்சிகளை வசைபாடிக்கொண்டிருக் கிறார் பிரதமர். 2:15 மணி நேரம் நாடா ளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர் மானத்துக்குப் பதில் அளித்து பேசினார் பிரதமர். அவர் என்ன பேசினார் என ஆங்கில நாளிதழ் கிண்டலடித்துக்  கூறியிருந்தது. பிலா.. பிலா..பிலா.. பிலா என முழுக்க அத்தனை காலத்திலும் கிண்ட லடித்திருந்தது. 

ஒரு பிரதமரை இந்த அளவுக்கு எந்த ஊடகமும் நாட்டில் கேலி செய்திருக்க முடியாது. அவர் நாடாளுமன்ற அவையில் பேசியதில் எதுவும் இல்லை என ஊடகம் கேலி செய்யும் நிலைக்கு பிரதமர் இருக்கிறார். அவரது ஆட்சியின்  நாள்கள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன. 

எந்த இந்து மக்களின் ஓட்டு வங்கியை நம்பி இருக்கிறாரோ அதே இந்து மக்கள் இந்த ஆட்சியை விரட்டி அடிக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *