கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

23.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
நிதிஷ்குமாருக்கு செம நோஸ் கட்- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை. ஒன்றிய அரசு கைவிரிப்பு.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
கன்வார் பயண வழியில் உணவக உரிமையாளர் பெயர் கட்டாயம் என்ற உ.பி., உத்தரகாண்ட் அரசாணை மீது உச்சநீதிமன்றம் தடை.
நீட் தேர்வு மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் காரசார வாதம் – எதிர்க்கட்சி எம்பிக்கள் சரமாரி குற்றச்சாட்டு: இந்திய தேர்வு முறையே ஒரு மோசடி ராகுல்காந்தி கடும் விமர்சனம்.
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.இல் பங்கேற்க தடையில்லை என்ற ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு. அரசுத் துறையை அரசியலாக்கும் முயற்சி என கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
நீட் மீதான புயல் – பொருளாதார கணிப்புகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட ரயில்வே சர்ச்சைகளுக் கிடையே ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
மத நல்லிணக்கத்தை பேணுவதற்கான நல்ல தீர்ப்பு: கன்வார் பயணம் மற்றும் உணவுக் கடைகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து பாஜக கூட்டணிக் கட்சியான நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கருத்து.
பங்களாதேஷில் இட ஒதுக்கீடு முறை எதிர்ப்புகள்: அமைதியின்மை ஆழமாக வேரூன்றிய அரசியல் பிளவுகளை எடுத்துக் காட்டுகிறது என்கிறார் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
விவசாயிகள் சங்கம் மீண்டும் போராட்டம்; ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் டிராக்டர் அணிவகுப்புகளை அறிவித்துள்ளது; ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆளும் பாஜகவின் உருவபொம்மையை எரிக்கவும் முடிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா
மோடி அரசின் பொருளாதார சர்வே, வறுமை குறித்து பொய்களை அவிழ்த்து விட்டுள்ளது – காங்கிரஸ் விமர்சனம்.
நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை நிறுவப்பட்டதில் இருந்து இதுவரை 16 தேர்வுகளை நிறுத்தி வைத்து சாதனை.
அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-சில் சேர ஒன்றிய அரசு அனுமதி. அரசு ஊழியர்கள் இனி ‘அரை டிராயர்’ அணிந்து வரலாமா? என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
உள் ஒதுக்கீடு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் ஒரு ஆண்டு கோருகிறது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *