புள்ளி விவர மோசடி இந்தியாவில் கரோனா உயிரிழப்பு அறிவிக்கப்பட்டதைவிட 8 மடங்கு அதிகமாம்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 23- கொடிய வைரசானகரோனா, முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கரோனாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். அதன்படி இந்த கொடிய நோய்க்கு 4,81,000 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ அரசு தரவுகள் கூறுகின்றன. ஆனால், இந்திய அரசு வெளியிட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கரோனா உயிரிழப்பு நிகழ்ந்ததாக பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கரோனாவால் கூடுதலாக 11.9 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இது அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 8 மடங்கு அதிகம் எனவும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

ஒன்றிய சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2019ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2020இல் 4.74 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே 11.99 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது” என கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *