இன்று தொடங்கியது நாடாளுமன்ற நிதி நிலை கூட்டத்தொடர் மொத்தம் 22 நாட்கள் 16 அமர்வுகள்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்றத்தின் நிதிநிலை கூட்டத் தொடர் இன்று (22.7.2024) தொடங்கி உள்ளது.
அரசு அலுவல்களுக்கு உட்பட்டு, கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12, 2024 திங்கட் கிழமை முடிவடையும்.
இந்த கூட்டத்தொடரில் 22 நாட்கள் 16 அமர்வுகள் நடைபெறும். இந்த அமர்வு முக்கியமாக 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய நிதி நிலை அறிக்கை தொடர்பான நிதி கோரிக்கைகளுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும், நாளை (23.7.2024) மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அத்தியாவசியமான பிற அலுவல்களும் கூட்டத்தொடரின் போது எடுத்துக் கொள்ளப்படும்.

இந்திய பொருளாதார ஆய்வறிக்கை இன்று (22.7.2024) நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்கான ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான நிதி நிலை அறிக்கையும் நாளை தாக்கல் செய்யப்படும்.
உத்தேசமாக, 6 சட்ட அலுவல் களும், 3 நிதி அலுவல்களும் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *