மாநில உரிமைகளுக்கு எதிரானது நீட் தேர்வு: ஆளுநருக்கு டாக்டர்கள் சங்கம் பதிலடி

2 Min Read

அரசியல்


சென்னை, ஆக. 18
– நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட் டிற்கும் எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீட் தொடர்பாக, மாணவர் ஒருவரின் தந்தை எழுப் பிய கேள்விக்கு , ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பதில் விவாதப் பொருளா கியுள்ளது. `முடிவெடுக் கக் கூடிய இடத்தில் நான் இருந்தால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒருபோ தும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்’ என அவர் கூறியுள்ளார். இது அரசியல் சட்டத்திற்கும், மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட் டிற்கு எதிரானதாகும்.

ஆளுநர் கூறுவது போல், மருத்துவக் கல்வி வணிகத்தை நீட் தடுத்திட வில்லை. உண்மையில் நீட்டிற்கும் மருத்துவக் கல்வி வணிகத்திற்கும் தொடர்பில்லை. நீட் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான ஒரு போட்டித்தேர்வு மட் டுமே. மருத்துவக் கல்வி வணிகமயமாவதற்கு அர சின் தனியார் மயமாக்கல் மற்றும் வணிக மயமாக் கல் கொள்கைகள்தான் காரணம். நியாயமான கட்டண நிர்ணயம், அதை கறாராக நடை முறைப் படுத்துதல், கட் டாய நன்கொடையை தடுத்தல், அரசு மருத்து வக் கல்லூரிகளை அதி கப்படுத்துதல் போன்ற வையே மருத்துவக் கல்வி வணிகமாவதை தடுக்கும். ஆளுநர் கூறுவது போல், `மருத்துவக் கல்வியில் நடைபெற்ற ரூபாய் 1000 கோடி வணிகத்தை’ நீட் தடுத்துவிட வில்லை.

மாறாக ஒன்றிய அர சின் தனியார் மயமாக்கல் கொள்கை மருத்துவக் கல்வி வணிகத்தை தற் போது பல ஆயிரம் கோடியாக அதிகரிக்கவே காரணமாயுள்ளது. நீட் அரசுப்பள்ளி மாணவர்க ளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் களுக்கும்,கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்க ளுக்கும், முதல்தலை முறை மாணவர்களுக்கும், ஏழை- எளிய குடும்பங்க ளைச் சேர்ந்த மாண வர்களுக்கும் எதிராக அமைந்தது. நீட் இல்லை எனில் ,தமிழ்நாட்டு மாண வர்களின் அறிவாற்றல் முடங்கி விடும் என ஆளு நர் கூறுவது, அறிவுத் தோற்றவியல் மற்றும் அறிவின் இயங்கியலுக்கு எதிரானது. நீட் இல்லாத பொழுது உருவாக்கப் பட்ட மருத்துவர்களும் திறமை மிக்கவர்களா கவே இருந்துள்ளனர் என்பதே வரலாறு. இவ் வாறு கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *