பிஜேபி ஆளும் மாநிலத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை

viduthalai
0 Min Read

போபால், ஜூலை 19- மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 15 வயது சிறுமி ஒருவருக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது. நிகழ்வு நாளன்று முரார் காவல் நிலைய பகுதியிலுள்ள கடைக்கு அந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றிருக்கிறார். அப்போது சிறுமியின் தாயுடன் சிலர் சண்டையிட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த சிறுமியை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். மேலும் அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *