மாணவர் கையில் ஆயுதங்களாம்! வேதனைப்படுகிறாராம் தமிழிசை

1 Min Read

அரசியல்

திராவிட இயக்கமும் கொடுக்கவில்லை, ஆயுதங்களை எந்த ஒரு பகுத்தறிவு இயக்கமும் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கமோ, அல்லது இடதுசாரி மாணவர் இயக்கமோ கொடுத்ததில்லை. ஆனால்,  தெருக்களில் ஊர்வலம் செல்வோம் என்று கூறி கைகளில் லத்தியை கொடுத்தது தமிழிசை சவுந்தரராஜன் போற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான்.

கொல்கத்தா சாலைகளில் ஜெய் சிறீராம்! என்று கூறிச்செல்லும் போது வாளையும் திரிசூலத்தையும் கொடுத்தது, விசுவ ஹிந்து பரிஷத், உத்தராகண்டில் அர அர மகாதேவ் என்று கூறிக்கொண்டு செல்லும் கூட்டத்தின் கைகளில் கத்தி, துப்பாக்கி கொடுத்தது பஜரங் தள், அரியானா, உத்தரப்பிரதேசம், மகாராட்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், அசாமில் இரும்புக்கம்பி, கத்தி, வாள், திரிசூலம், துப்பாக்கி மற்றும் கதாயுதத்தைக் கொடுத்து இசுலாமியர்களின் வாழ்விடங்களை தாக்கவும், கொலைசெய்யவும், வாகனங்களை அடித்து நொறுக்கவும் பயிற்சி அளித்து ஊர்வலம் செல்லவைத்தது, அனைத்தும் ஹிந்துத்துவ அமைப்புகள். சான்றுகள் ஒன்றா இரண்டா? இதோ…. மாணவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்தவர்கள் யார் என்று தெரிகிறதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *