சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
ஆர்.மகாதேவன் அவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி நியமனம் ஆன நிலையில், அவர் சென்று, பதவியேற்றுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி (நிரந்தரம்) வந்து பதவியேற்கவிருக்கும் இடைவெளியில், பொறுப்புத் தலைமை நீதிபதியாக மாண்பமை ஜஸ்டிஸ் D.கிருஷ்ணகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றுவதை சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு நாம் வரவேற்கிறோம்.
ஆற்றலும், திறமையும், உழைப்பும் கொண்ட மூத்த நீதிபதியாக உள்ள அவருக்கும், அடுத்து பல புதிய பொறுப்புகள் வரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
19.7.2024
சென்னை