பண மசோதாவாக நிறைவேற்றப்படும் மசோதாக்கள் அரசியல் சாசன அமர்வு அமைக்க உச்ச நீதிமன்றம் பரிசீலனை

1 Min Read

புதுடில்லி, ஜூலை 18- பண மசோதாவாக தாக்கல் செய் யப்படும் மசோதாக்களை நாடாளு மன்ற மக்களவையில் மட்டும் நிறைவேற்றினால் போதும். அதற்கு மாநிலங்களவை ஒப்புதல் அளிக்கவோ, நிராகரிக்கவோ தேவையில்லை.
மாநிலங்களவையில், ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்ததால், மாநிலங்கள வையை தவிர்ப்பதற்காக ஆதார் மசோதா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட திருத்த மசோதா போன்ற மசோதாக் களையும் ஒன்றிய அரசு பண மசோதாவாக தாக்கல் செய்து நிறை வேற்றியது.

இதுபோன்ற மசோதாக்களை பண மசோதாக்களாக நிறை வேற்றுவது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு 15.7.2024 அன்று மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், இந்த மனுக்களை விரைவில் பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு தலைமை நீதிபதி, இந்த மனுக்களை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைப்பது பற்றி உச்சநீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *