இதுதானா ஒன்றிய பாஜக அரசின் மனிதநேயம்? ‘பிஎம் கேர்ஸ்’ திட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான விண்ணப்பங்கள் பாதிக்குமேல் நிராகரிப்பு!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 18- கரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ‘பிஎம் கேர்ஸ்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமாா் 51 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் கரோனா பெருந்தொற்று நிலவிய கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் முதல் கடந்தாண்டு மே 5 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அந்த நோய் பாதிப்பால் பெற்றோா், சட்டப்பூா்வ பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ‘பிஎம் கோ்ஸ்’ திட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் நாட்டின் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 613 மாவட்டங்களில் இருந்து 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஒன்றிய அமைச்சக அதி காரிகள் வழங்கிய தரவுகளின்படி, 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 558 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 4,532 விண் ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன.
சுமாா் 51 சதவீதம், அதாவது 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 18 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்களை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
மாநிலங்களில் அதிகபட்சமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து முறையே 1,553, 1,511, 1,007 விண்ணப்பங்கள் பெறப்பபட்டன.

இதில் ராஜஸ்தானிலிருந்து 210 விண்ணப்பங்களும் மகாராட்டிரத்தில் இருந்து 855 விண்ணப்பங்களும் உத்த ரப்பிரதேசத்தில் இருந்து 467 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள் ளப்பட்டன.
இத்திட்டத்தில் இணையும் குழந்தைகள் 23 வயதை அடையும் வரை, அவர்களுக்கான சுகாதார காப்பீடு, கல்வி அதிகாரமளித்தல் மற்றும் நிதியுதவி வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *