சத்தீஷ்காரில் பணி நியமன முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணை தேர்வாணைய மேனாள் தலைவர் மீது வழக்கு

1 Min Read

புதுடில்லி, ஜூலை 17- சத்தீஷ்கார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 2020- 2022-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தலைவராக இருந்தவர் தமன் சிங் சோன்வானி. செயலாளராக இருந்தவர் துருவ். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரை துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளில் பணி நியமனம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணி நியமன முறைகேடு தொடர்பான விசாரணை சி.பி.அய்.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த விசாரணையை
சி.பி.அய். முறைப்படி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
அத்துடன் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்து உள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (15.7.2024) ராய்ப்பூர் மற்றும் பிலாலில் உள்ள அவர்களது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சி.பி.அய். அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *