ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்குப் பயிற்சி பெற்ற மாணவர்கள் 22 பேர் தற்கொலை!

1 Min Read

கோட்­டா­ந­கர், ஆக. 19 ராஜஸ்­தான் மாநி­லம் கோட்டா நக­ரில், நீட், அய்.அய்.டி. நுழை­வுத்­தேர்வு பயிற்சி பெற்று வந்த 22 மாண­வர்­கள் கடந்த ஓராண்­டில் தற்­கொலை செய்து கொண்­டுள்­ளது பெரும் அதிர்ச்சியை ஏற்­ப­டுத்தியுள்­ளது.

அய்.அய்.டி., என்.அய்.டி. உள் ளிட்ட ஒன்­றிய அர­சின் உயர் கல்வி நிறு வனங்­களில் பொறி­யி­யல் படிப்பு களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்­தப்­ப­டு­கி­றது.

இதே­போல், மருத்­துவக் கல்வி பயில்­வ­தற்கு நாடு முழு­வ­தும் நீட் தேர்வை ஒன்­றிய அரசு நடத்தி வரு கி­றது. இத்­தேர்­வு­கள் மூலம் ஆதாயம் பெறும் நோக்­கில் நாடு முழு­வ­தும் பல தனி­யார் நிறுவனங்கள் பயிற்சி மய்யங்களை நடத்தி வரு­கின்றன. இதற்­காக லட்­சக்­க­ணக்­கான ரூபாய் கட்­ட­ண­மாக வசூ­லிக்­கப்படு­கி­றது. ராஜஸ்­தா­னில் உள்ள கோடா நகர் இப்­ப­யிற்சி மய்யங்க­ளின் மய்ய­மாக விளங்கி வரு­கி­றது.

இந்­நி­லை­யில், கோட்டா நக­ரில், அய்.அய்.டி. நுழை­வுத்­தேர்வு பயிற்சி பெற்று வந்த பீகா­ரைச் சேர்ந்த பால் மிகி ஜாங்­கிட் என்ற 18 வயது மாணவர் தற்­கொலை செய்து கொண் டுள்­ளார்.

இதே­போல், கோட்டா நக­ரில் தங்கி அய்.அய்.டி. நுழை­வுத்­தேர் வுக்குத் தயா­ராகி வந்த பீகா­ரின் சம் ப­ரன் மாவட்­டத்­தைச் சேர்ந்த மிஸ்ரா என்ற மாண­வ­ரும், நீட் தேர்­வுக்கு தயா­ராகி வந்த உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தின் ராம்­பூர் நக­ரைச் சேர்ந்த மஞ்­சோத் சாப்ரா என்ற மாண­வ­ரும் 10 நாள்களுக்கு முன் தற்­கொலை செய்து கொண்­ட­னர். 

நீட், ஜேஇஇபோன்ற நுழைவுத்­தேர்வு பயிற்சி நிறுவனங்­க­ளின் தலை­ந­க­ராக அறியப்ப­டும் கோட்டா நக­ரில், நடப்­பாண்­டில் மட்­டும் 22 மாண­வர்­கள் தற்­கொலை செய்து கொண்­டுள்­ளது தற்­போது அம்பலமாகி அதிர்ச்­சிக்­குள்­ளாக்கி உள்­ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *