தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆகஸ்டு மூன்று முதல் மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 15- ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களின் பதவிக் காலம், நடப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 2024-2026ஆம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைக் கொண்டு எஸ்.எம்.சி. குழு மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது. இந்தக் குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் செயல்பட வேண்டும்.
அத்துடன், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர், மேனாள் மாணவர்கள் என மொத்தம் 24 பேர் குழுவில் இடம்பெற்றிருப்பர். அதில் 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுப்பினர்களை தேர்வு செய்யும் அலுவலராக இருப்பார்.

இதுதவிர, எஸ்.எம்.சி. குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தை ஜூலை 28ஆம் தேதி நடத்த வேண்டும். இதில் பங்கேற்க பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ் அப், துண்டு பிரசுரங்கள், மாணவர்கள் மூலமாக ஜூலை 26ஆம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும். இதையடுத்து, மாநிலம் தழுவிய எஸ்.எம்.சி. மறுகட்டமைப்பு நிகழ்வை அதற்கான அட்டவணையின்படி நடத்த வேண்டும். நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆக.3ஆம் தேதியும், தொடக்கப் பள்ளிகளுக்கு ஆக.10, 17ஆம் தேதிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆக. 24ஆம் தேதியிலும் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *