ஜூலை 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் 5 முனைகளில் புறப்பட்ட நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணக் குழு குழுவின் இரண்டாம் குழு 14.7.2024 அன்று உரத்தநாட்டிற்கு வருகை தந்தது. குழுவினரை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் இராஜரத்தினம், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு,ஒன்றிய அவைத்தலைவர் சந்திரசேகரன் ஆகியோருடன் வருகை தந்து தோழர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்று பயண குழுவின் நோக்கம் வெற்றி பெற திமுகவின் ஆதரவை தெரிவித்து மகிழ்ந்தார். உடன் திராவிடர் கழக மாநில மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள்.