டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை ஆனால் சிறையிலிருந்து வெளியே வர முடியாதாம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 13- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19இன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை அளித்து உத்தரவிட்டு இருக்கிறது. ஏற்கெனவே சிபிஅய்யும் மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை கைது செய்து இருப்பதால், அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *