உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷ்யாவுக்கு எதிராக அய்.நா. தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு

2 Min Read

ஜெனீவா, ஜூலை 13- ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலைய மான ஜபோரிஜியா அணுமின் நிலையம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனிடையே அண்மை காலமாக உக்ரைன் மின்கட்ட மைப்புகளை குறிவைத்து ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலை யில் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக அய்.நா.வில் நேற்று முன்தினம் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

‘ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பிலான தீர்மானத்தை உக்ரைன் முன்மொ ழிந்தது. பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் தீர்மானத்தை வழிமொழிந்தன.அந்த தீர்மானத்தில் “உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து ராணுவப்படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும்.
குறிப்பாக ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

உக்ரைனின் அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் அணு விபத்து அல்லது விபத்து ஏற்படும் அபாயத்தை ரஷ்யா அதிகரிக்கிறது. எனவே, அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைனின் இறையாண்மையின் கீழ், அந்நாட்டு அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டிற்கு உடனடியாக ஆலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். உக்ரைனின் எரி சக்தி உள்கட்டமைப்பிற்கு எதி ரான தாக்குதல்களை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
193 உறுப்பினர்களை கொண்ட அய்.நா பொதுசபை, உக்ரைனின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.இதில் அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதி ராக வாக்களித்தன.இந்தியா, சீனா, வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான் உள்பட 99 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *