தஞ்சாவூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்

1 Min Read

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகம் சார்பில் மாநில தழுவியஅளவில் இரு சக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி இராமநாதபுரத்தில் புறப்பட்ட நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் இரண்டாவது குழு தோழர்கள் தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு தெற்கு ஒன்றியம் கவராப்பட்டிற்கு 14.07.2024 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு வருகை தர உள்ளார்கள்.

தொடர்ந்து ஒக்கநாடு கீழையூர், உரத்தநாடு, மேஉளுர், தஞ்சாவூர், கண்டியூர் திருவையாறு வழியாக அரியலூர் மாவட்டம் திருமானூர் சென்றடைய உள்ளார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் வைத்துள்ள அனைத்து கழக தோழர்களும் கவராப்பட்டில் காலை 11 மணிக்கு வரவேற்று திருவையாறு ஒன்றியம் விளாங்குடி வரை சென்று அரியலூர் மாவட்ட தோழர்களிடம் பயண குழுவினரை வழியனுப்பும் வரை அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவன்: சி.அமர்சிங், மாவட்டத்தலைவர்
அ.அருணகிரி, மாவட்டச்செயாளர்
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *