மக்களை பிளவுபடுத்தித் துண்டாடும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! சரத் பவார் கண்டனம்

1 Min Read

அரசியல்

மும்பை, ஆக. 20 –  ஒன்­றிய அரசு ஜாதி, மத அடிப்­ப­டை­யில் மக்களை பிள­வு­படுத்தி வரு­கி­றது. நிலை­யான அரசு என்று தங்­க­ளைக் கூறிக் கொண்­டா­லும், எதிர்க்­கட்சி மாநி­லங்­க­ளில் ஆட்­சியை உருக்குலைக்­கின்­ற­னர் என சரத்­ப­வார் தெரி­வித்­தார்.

அடுத்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­துக்­கும், மகா­ராட்­டிர சட்­டப் பேர­வைக்­கும் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், கட்­சியை வலுப்ப­டுத்­தும் வகை­யில் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத்­ப­வார், சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

பீட் மாவட்­டத்­தில் நடந்த பேர­ணி­யில் சரத்­ப­வார் பேசி­ய­தா­வது: 

பிர­த­மர் நரேந்­திர மோடி மணிப்­பூ­ருக்­குச் சென்று, அங்கு என்ன நடக்­கி­றது என்று பார்க்க வேண்­டும். வட­கி­ழக்கு மாநில மக்­க­ளின் வலியை உணர வேண்டும்.

கடந்த மே மாதத்­தில் இருந்தஅந்த மாநி­லத்­தில் கல­வ­ரங்­கள் நடந்து வருகின்றன. ஒன்­றிய பா.ஜ.க. அரசு சமு­தா­யத்தை, மக்­களை ஜாதி, மத அடிப்­ப­டை­யில் பிள­வு­ப­டுத்தி துண்­டா­டு­கி­றது. நிலையான அரசு என்று தன்­னைக் கூறிக் கொள்­கி­றது. ஆனால், மாநி­லத்­தில் உள்ளஆட்­சியை சீர்­கு­லைத்து வருகிறது.

பிர­த­மர் நரேந்­திர மோடி தனது சுதந்­திர நாள் உரை­யில், ‘‘நான் மீண்­டும் வெற்றி பெற்று வரு­வேன்’’ என கூறி­யுள்­ளார். அவர், மகா­ராட்­டிர துணை முதலமைச்சர் தேவேந்­திர பட்­நா­விஸ் வழி­யைப் பின்­பற்றி, அவ­ரைப் போல் கூறியுள்­ளார்.

கார­ணம், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மகா­ராட்­டிர சட்­டப்­பே­ரவை தேர்­தலுக்குமுன்பு, ‘நான் மீண்­டும் முதலமைச்சராக வரு­வேன்’ என்றுபட்­நா­விஸ் கூறி­னார். ஆனால், உண்­மை­யில் என்ன நடந்­தது? அவ­ரால் வர முடிந்­ததா? எனவே, பிர­த­மர் என்­ன­வாக திரும்பிவரப்­போ­கி­றார் என்று ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது.

இன்­னும் சொல்­லப்­போ­னால் ஏற்­கெ­னவே இருந்­ததை விட குறைவான பதவியில்­தான் பட்­நா­விஸ் இப்­போது இருக்­கி­றார். உரத்தின் விலை உயர்ந்து விட்­டது. ஆனால் ஒன்­றிய அரசு விவசாயிக­ளைப் பற்­றி­யெல்­லாம் கவ­லைப்­ப­ட­வில்லை.

-இவ்­வாறுசரத்­ப­வார் பேசி­னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *