இந்திய ரூபாய் மதிப்பு-இதுவரை இல்லாத சரிவு!

1 Min Read

அரசியல், இந்தியா

மும்பை, ஆக.20 – அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 18.8.2023 அன்று ஒரு பைசா அளவுக்கு சரிந்து, 83.10 ரூபாயாக உள்ளது.

உள்நாட்டு சந்தைகளில் நில வும் எதிர்மறையான நிலை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக, ரூபா யின் மதிப்பு குறைந்து வருகிறது. உலகளாவிய சந்தைகளில் நிலவும் பதற்றம் மற்றும் உயரும் அமெரிக்க டாலரி-ன் மதிப்பு போன்றவையும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 17.8.2023 அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 1 பைசா குறைந்து 83.09 ஆக இருந்தது.

அமெரிக்காவின் வாராந்திர வேலையின்மை எண்ணிக்கை, முந் தைய வாரத்தின் 2.50 லட்சத்தி லிருந்து இந்த வாரம் 2.39 லட்சமாக குறைந்ததால், அன்றைய நாள் அமெ ரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது. இருப்பினும் சீனாவின் யுவான், 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்ததை அடுத்து, சீன மத்திய வங்கி தலையிட்டதால், அமெரிக்க டாலரின் மதிப்பு 18.8.2023 அன்று சற்றே குறைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி வழக்கமான ஒன்றுதான், அசாதாரணமில்லை என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், இந்தியாவிற்கு மட்டும் பிரத்யேகமானதல்ல என்றும், அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க முதலீடுகளின் வரு வாய் மதிப்பு மாறுபடும்போது, அது அனைத்து நாணயங்களின் பரிமாற்ற விகிதங்களிலும் தாக் கத்தை ஏற்படுத்தும். இதற்கு இந்திய ரூபாயும் விதிவிலக்கல்ல.

ரூபாயின் ஏற்ற இறக்கத்தால் பணவீக்கம் பாதிக்கப்பட்டாலும், ரிசர்வ் வங்கி அதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

பரிமாற்ற விகிதங்கள் மிகவும் நிலையற்றதாக இருப்பதால், ரூபா யின் மதிப்பு நீண்ட காலத்திற்கு இதே நிலையில் நீடிக்கும் என்று கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *