மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர்” அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறி வுறுத்தலின்படி அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த  மராத்திய மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் மறைந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கடைப்பிடித்து  தமிழ்நாடெங்கும் கூட் டங்கள் நடத்தப் படவேண்டும் என்று அறிவித்துள்ளார்.

அதுபோன்று மும்பையிலும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம்  தாராவி கலைஞர் மாளிகையில் 20.08.2023 மாலை 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் வரவேற்புரையாற்ற,  மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திற்கு அய்யா முல் லுண்ட் பாலசுப்ரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். இந்நிகழ்வு மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்  அ.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்கள் சோ. ஆசைத்தம்பி, அய்.செல்வராஜ், பெரியார் பாலாஜி, முலூண்ட் ஆ.பாலசுப் பிரமணியம், ஸ்டீபன் ரவிக்குமார், கயல்விழி (ஜிமிஷிஷி), மும்பை திமுக மூத்த தலைவர் என்.வி.சண்முகராசன் ஆகியோர் முன்னிலை வகிக்க நினைவேந்தல் உரை சு.குமணராசன் சிறப்புரையாற்றவுள்ளார் . 

அனைவரும் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றும்  படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

– மும்பை பகுத்தறிவாளர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *