அதானி வீட்டின் திருமணத்திற்காக…!

Viduthalai
1 Min Read

மும்பையில் பன்னாட்டு கலைஞர் ஒருவரின் முன் திட்டமிடப்பட்ட இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால், இன்று (12.7.2024) மும்பையில் நடக்கும் தொழிலதிபர் ஒருவரின் மகனின் திருமணத்தில் மோடி கலந்து கொள்கிறார்.
ஒரு குடும்பத்தின் விசேஷம் என்ன வென்றால், “திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்காக” விமான நிலையத்திற்கு பன்னாட்டு தகுதி வழங்கப்பட்டது.

அதைப் “பொது நிகழ்வு” என்று கூறி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது மோடி திருமணத்திற்கு செல்வதால் ஓர் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. .
அமெரிக்கா, அய்ரோப்பா அல்லது எந்த முன்னேறிய ஜனநாயகத்திலும் இந்த மாதிரியானவற்றை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
ஒரு தொழிலதிபரின் தனிப்பட்ட திருமணத்தில் மோடி கலந்துகொள்கிறார். அது ‘‘தேசிய நிகழ்வாக’’ கருதப்படுகிறது, மற்ற அனைத்தையும் ஏன் ரத்து செய்ய வேண்டும்?
மோடி எந்த மாதிரியான தலைவர், தனியார் வீட்டுத் திருமணத்திற்கு போகிறார்; ஆனால், பற்றி எரியும் மணிப்பூருக்குப் போகமாட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *