தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூறாவது பிறந்தநாள் கழகத்தின் சார்பில் மரியாதை

1 Min Read

குன்றக்குடி, ஜூலை 11 தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூறாவது பிறந்தநாளான இன்று (11.7.2024) குன்றக்குடியில் உள்ள அவரது சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட தி.க.காப்பாளர் சாமி.திராவிடமணி தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன்,மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கல்லல் ஒன்றிய தலைவர் பலவான்குடி ஆ.சுப்பையா, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ.பாலு, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, தி.தொ.ச. மாவட்ட தலைவர் சூரிய மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி அனைவர் முன்னிலையிலும் படிக்கப்பட்டு படிகள் எடுத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *