சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் நேற்று (20.8.2023) 644 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று ஒருவருக்கும், கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று கரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. இதைபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.