‘நீட்’டை எதிர்த்து டில்லியிலும் போராட்டம் நடக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஆக.21 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் ‘நீட்’ தேர்வு விலக்கு உறுதி என்றும், ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம் சென்னையோடு நிற்காது; டில்லியிலும் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தின் முடிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

‘நீட்’ தேர்வால் 21 உயிர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். இது தற்கொலை கிடையாது. இது கொலை. இந்த கொலையை செய்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதற்கு துணை நின்றது அ.தி.மு.க.தான். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று கூறுவதற்கு ஆளுநர் யார்? நீங்கள் ஒரு அஞ்சல்காரர் தான். முதலமைச்சர் சொல்வதை ஒன்றிய அரசிடம் கொடுப்பது தான் உங்கள் வேலை.

நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகி தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டனை எதிர்த்து நீங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்கிறேன்.

‘நீட்’ தேர்வை என்றைக்கு ஒழிக்கிறோமோ? அன்றைக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு விடியல். அதை தி.மு.க. களத்தில் இறங்கி கண்டிப்பாக செய்யும். தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு வாங்கி தருவார்.

அ.தி.மு.க.வுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். அ.தி.மு.க. மாநாட்டில் ஒரு தீர்மானத்தை போடுங்கள். ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமியிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கூட வர வேண்டாம். உங்கள் இளைஞர் அணி செயலாளரை, மாணவர் அணி செயலாளரை அனுப்பி வையுங்கள். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து டில்லிக்கு சென்று பிரதமர் வீட்டு முன்பு போய் உட்காருவோம். அதில், ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கிடைத்தது என்றால் முழுப் பெருமையையும் நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். அ.தி.மு.க.வால் தான் ‘நீட்’ தேர்வு ரத்தானது என்று நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் தயாரா?.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை ஓட, ஓட விரட்டி, காங்கிரஸ் ஆட்சியை உட்கார வைத்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு ரத்தாகும். ராகுல்காந்தி அந்த வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார். இந்த போராட்டம் இத்துடன் நிற்காது. தலைவரின் அனுமதியை பெற்று விரைவில் டில்லியில் போராட்டம் நடத்தப்படும்  இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *