Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ‘‘ஜெய்(பூரி) ஜெகன்நாத்’’ ஒய் (why) கடவுள் சிலை விழுந்து விபத்து?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஊசி மிளகாய்கவிஞர் கலி.பூங்குன்றன்

‘‘ஜெய்(பூரி) ஜெகன்நாத்’’ ஒய் (why) கடவுள் சிலை விழுந்து விபத்து?

Last updated: July 10, 2024 3:52 pm
Published July 10, 2024
ஊசி மிளகாய்
SHARE

ஊசிமிளகாய்

காவிக் கட்சியினர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பிரதமர் மோடி முன்பெல்லாம் ‘ஜெய் சிறீராம்‘ என்றுதான் எதிர் முழக்கம் செய்வர்!
ஹிந்துத்துவ வெறிபிடித்த காவிக் காலிகள் பலர் கார்களை நிறுத்தி, டில்லியிலும், உ.பி.யிலும் மற்ற சில ஊர்களிலும், வடபுலத்தில் கட்டாயமாக பயணிகளை மிரட்டி ‘ஜெய் சிறீராம்‘ என்று கூச்சல் போட வற்புறுத்தி, அச்சுறுத்துவர்!
உ.பி.யில் ஒருவரை ஒருவர் சந்தித்து வணக்கம் தெரிவிப்பதற்குப் பதிலாக – முட்டிக்காலைத் தொட்டு, ‘‘ராம் ராம்‘‘ என்பர்; அவர்களும் திருப்பி வணக்கமோ, நமஸ்காரமோ சொல்லாமல், திருப்பி ‘‘ராம் ராம்‘‘ மட்டுமே சொல்லும் அளவுக்கு மக்களுக்கு ‘மூளைச்சாயம்‘ ஏற்பட்டது!
அதைத் தேர்தல் மூலதனமாக்கி வெற்றி பெற அயோத்தியில் அவசர அவசரமாகப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அரசான மோடி அரசு. உச்சநீதிமன்றமும் இதற்குத் தனது தினசரி விசாரணை என்று நடத்தி, தீர்ப்பை நியாய விரோதமாக, நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, சான்றா வணங்களை எடுத்துக்கொள்ளாமல், தீர்ப்பு வழங்கியது. எப்படியோ அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததுபோல 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்குள் பால இராமன் கோவிலை அயோத்தியில் கட்டி, இந்தியா முழுவதும் யாத்திரை, கூசும் அளவுக்கு விளம்பர வெளிச்சத்தில் நீந்தி கடையேறித் தேர்தல் பிரச்சாரத்தை செய்தனர்!

விளைவு, படுதோல்வி! அயோத்தியில் மட்டுமல்ல, அதன் சுற்றுத் தொகுதியில் மட்டுமல்ல; மோடி போன இராமேசுவரம், இராமநாதபுரம், சீறிசைலம், எல்லாத் தொகுதிகளிலும் தோல்விக்குமேல் தோல்வி!
இந்தப் புரட்டுக்குப் பொட்டு வைப்பதுபோல், இராமன் கோவில் கூரை ஒழுகல், கர்ப்பக்கிரகத்தில் பூசை செய்ய முடியாமல், அர்ச்சர்களே புகார், அரை குறையாக, அவசரக் கதியின் அவலத்தின் கொடு மையை பால இராமன் அன்றாடம் அனுபவிக்கிறார்!

அயோத்தி விமான நிலையமோ வெறிச்சோடி, ஈ ஓட்டும் நிலைக்கு வந்துவிட்டது!
இதனால், பால இராமன் – முற்றிய ராமன் எல்லாம் மோடியால் கைவிடப்பட்டு, ஒடிசாவில் கிடைத்த ஆறுதல் பரிசை எண்ணி, பூரி ஜெகன்னாதரை அடைக்கலம் தேடி, ‘ஜெய் ஜெகன்னாத்‘துக்கு மாறினர் மோடியும், அவரது சுற்றுக்கிரகங்களும்!
ஆனாலும், அங்கேயும் பூரி ஜெகன்னாதர் கடவுள் அன்ட் கோ கைகொடுக்கவில்லை போலும்!
இதோ இன்று வந்துள்ள ஒரு செய்தி – பூரி ஜெகன்னாதன்பற்றி, படியுங்கள்!
பூரி ஜெகநாதர் கோவிலில் ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்த சம்பவத்தில்
9 பக்தர்கள் காயமடைந்தனர்

Also read

ஊசி மிளகாய்
காலமெலாம் ஓயாத ‘‘வடகலை – தென்கலை சண்டை!’’
போற்றுவோம் புரட்சிக் கவிஞரை!

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இந்து மத வழிபாட்டு தலமான உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 7ம் தேதி ரத யாத்திரை நடைபெற்றது. இதில் பலராமர், கிருஷ்ணர், சுபத்ரா ஆகிய கடவுள் சிலைகள் தனித்தனி தேரில் நகர் முழுவதும் யாத்திரையாக கொண்டுவரப்பட்டன. இதை தொடர்ந்து பிற கடவுள் சிலைகளும் யாத்திரையாக நகர் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பூரி ஜெகநாதர் கோவில் உள்ள கடவுள் பாலபத்ராவின் சிலை நேற்று (9.7.2024) யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ரத யாத்திரை சென்று கொண்டி ருந்தபோது எதிர்பாராத விதமாக கடவுள் பாலபத்ராவின் சிலை சரிந்து பக்தர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: கடவுள் சிலைகள் என்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி கவனிக்கத்தக்கது.

Ad imageAd image

You Might Also Like

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

‘தினமலரின் தகடுதத்தமான கட்டுரைக்குப் பதிலடி!!

சிங்கத்தின் பேரன்!

ஆன்மிகம், ஜீவாத்மா, பரமாத்மா கதைகளை நன்னா கேளுங்கோ!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோவையில் கருப்புக் கொடி! கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்பீர்!

Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?