ஒன்றிய அரசின் மூன்று புதிய சட்டங்களை எதிர்த்து தி.மு.க. வழக்குரைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

1 Min Read

சென்னை, ஜூலை 7– ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க., வழக்குரைஞர்கள் நேற்று முன்தினம் (5.7.2024) காலையில் போராட்டம் நடத்தினர். தி.மு.க., சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. வழக்குரை ஞர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, இந்த 3 சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வழக்குரைஞர்கள் முழக்கமிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங் களும் இல்லாமல், எதேச்சதிகாரமாக இந்த 3 சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு எப்படி அரசியல் அமைப்புக்கு விரோதமாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரானவையாக உள்ளவை. எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டும்” என்று கூறினார்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந் துள்ள 3 புதிய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *