கன்னியாகுமரியில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி திராவிடர்கழகம் சார்பில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

0 Min Read

நீட் தேர்வை ரத்துசெய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா 11.7.2024 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள், தோழர்களை பேரணியில் பங்கேற்க வைத்தல் மற்றும் விடுதலை நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு பணிகளை திராவிடர் கழக குமரிமாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், செயலாளர் கோ.வெற்றிவேந்தன், கன்னியாகுமரி நகர கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் மற்றும் தோழர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பேரணி அனுமதி பெற கடிதம் கொடுத்தல், தோழர்கள் தங்குவதற்காக இடம் ஏற்பாடு செய்தல் மற்றும் பேரணிக்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *