சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்குப் பதியக்கூடாது – உச்ச நீதிமன்றம்

1 Min Read

சென்னை, ஜூலை 5-சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளின் நடவடிக்கை பற்றியோ சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பதிவிட்டால் வழக்குப் பதிவு, கைது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

நாட்டில் சமூக வலை தளங்களில் ஒருவரைப் பற்றியோ அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளின் நடவடிக்கை பற்றியோ அல்லது ஆளுகின்ற அவர்களை பற்றியோ பதிவிட்டால் இதற்கு முன்பு காவல் துறையில் புகார் அளித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இது தொட‌ர்பாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது…

இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் சமூக வலைத் தளத்தில் அரசு துறைகள், அரசு அலுவலர்களின் செயல்கள், சமூக சார்ந்த தகவல்கள், செய்திகள், போன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டால் சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் வழக்கு பதியக்கூடாது, கைது செய்யவும் கூடாது அவர்கள் மீது எவ்வித புகாரும் பதியவும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…

நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி அவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது…
அதனால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் மற்றும் தவறுகளை சுட்டிக் காட்டி அநியாய அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு அநீதிக்கு எதிராக போராடி தவறுகளை சுட்டிக்காட்ட இனி தடை ஏதுமில்லாமல் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் எவ்வித தங்கு தடையுமின்றி சமூக பணி யாற்றலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *