40க்கு 40 வெற்றி பெற தந்தை பெரியார் தான் மூல காரணம்!

Viduthalai
1 Min Read

பெண் அடிமைத்தனத்திலும், மூடநம்பிக்கையிலும் ஊறிக் கிடந்த இந்த தமிழ்நாட்டில் சுயமரியாதைக் கருத்தையும், பெண் விடுதலைக் கருத்தையும் ஊட்டியவர் தந்தை பெரியார் தான். அவரை பின்பற்றித்தான் திராவிட முன்னேற்றக் கழகம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரியார் மட்டும் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டியிருக்காவிட்டால் என்னைப் போன்ற பெண்கள் இப்படி மேடையேறி பேசியிருப் போமா என்பது எனக்கு தெரிய வில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப் பினராக, ஒரு மருத்துவராக நான் இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு தலைவர் கலைஞருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

அவர்களும் பெண்கள் முன்னேற்றத் திற்கு நிறைய செய்கிறார்கள். சமூக நீதி சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இது பெண் கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்று இருக்கிறது. அதனால் தான் தென்காசியில் மட்டுமல்ல, தமிழ்நாடு – புதுவை இரண்டிலுமாக 40க்கு 40 நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். இதற்கெல்லாம் மூல காரணம் தந்தை பெரியார் தான்.
தென்காசி தொகுதியில் என்னை பெருமளவில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியிட வைத்த கலைஞரின் புதல்வன் முதலமைச்சர் தளபதி அவர்களுக்கும், துணை பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ஒத்துழைத்த தி.மு.க. தோழர்களுக்கும், இந்திய கூட்டணி தோழர்களுக்கும் நன்றி

தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராணி சிறீகுமார் (சாம்பவர் வடகரை, 4.7.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *