காரைக்கால் பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read

காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான மானமிகு ரெ.ஜெயபாலன் (வயது 74) அவர்கள் நேற்று (3.7.2024) மாலை 4 மணி யளவில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று, இறுதி வரை கடைப்பிடித்து, இயக்கத்தில் உறுதியோடு செயலாற்றி, தன் குடும்பத்தையும் அந்தப் பாதையில் வழிநடத்தியவர் பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன் ஆவார்.
இவருக்கு, இவரின் இயக்கப் பணிகளுக்கு உறு துணையாக இருந்த ஜெ.சந்திரா என்ற மனைவியும், ஜெ.திராவிடமணி, ஜெ.இளஞ்செழியன், ஜெ.செந்தமிழன் ஆகிய மகன்களும் உள்ளனர். மருத்துவர் ஜெ.வைக்கம் மதி என்னும் மகளும் உண்டு.

அவருக்கு நமது வீரவணக்கம்!
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

4.7.2024

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி இறுதி நிகழ்வில் பங்கேற்பார். இறுதி ஊர்வலம் 4.7.2024 மாலை 4.00 மணியளவில் நிரவி திருவள்ளுவர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *