நீட் மனுக்கள் மீது வரும் 8ஆம் தேதி விசாரணை

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 4- இளநிலை மருத்துவப் படிப்புகளுக் கான நீட் தேர்வு, கடந்தமே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள், கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. வினாத்தாள் கசிவு, 1,563 மாண வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால், மறுதேர்வுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர் பான மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் 8ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றன. உச்ச நீதிமன்றம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 8ஆம் தேதிக்கான வழக்கு பட்டியலில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 26 நீட் தேர்வு மனுக்கள் விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *