புதுடில்லி, ஜூலை 3- பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநா யக கூட்டணி அரசின் முதலாவது நாடாளு மன்ற கூட்டத்தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 27ஆம் தேதி உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் மக்களவையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத் தில் அவைக்குறிப்பு நீக்கம் குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, எனது பேச்சில் எதை வேண்டுமானாலும் நீக்கட்டும். ஆனால் நான் பேசியது உண்மைதான். மோடியின் உலகத்தில் உண்மைக்கு இடமில்லை. ஆனால் யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது. நான் சொல்ல வேண்டிய தைச் சொன்னேன். அதுதான் உண்மை என்றார்.