கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.7.2024

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வர்ண ஜாதி முறையை இங்கே பேசாதீர்கள், மாநிலங் களவைத் தலைவர் தன்கர் மீது மல்லிகார்ஜூனா கார்கே ஆவேச தாக்கு.

* வகுப்புவாத அரசியலுக்கு மக்களவை தேர்தல் முற்றுப்புள்ளி வைத்தது: அகிலேஷ் பேச்சு.
* மக்களவையில் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பேச்சுக்களை மீண்டும் சேர்க்க வேண்டும்: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள்; ‘இது சமூக நீதியை உறுதி செய்யும்’, சந்திரசேகர் ஆசாத், எம்.பி. மக்களவையில் கோரிக்கை.

* எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் குழு மீது தொடர்ந்து தாக்குதல்: ‘நம்பகத்தன்மை இல்லை’. உத்தரப் பிரதேசத்தில் “நான் அனைத்து 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை நம்ப மாட்டேன்” என அகிலேஷ் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது:

*”உங்கள் இதயத்தில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள், வீடற்றவர்கள், தாய்மார்கள் மற்றும் கைம்பெண்கள் பற்றி சிந்தியுங்கள். அவர்களைப் பற்றி சிந்தியுங்கள், பின்னர் தேசியவாதம் பற்றி பேசுங்கள்” என பிரதமரை நோக்கி

காங்கிரஸ் எம்.பி. காட்டம்.

*65% இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பீகார் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

* ‘தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்; கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை நகர தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டாம். நீதிபதி முருகேசன் தலைமையிலான மாநில கல்வி கொள்கை குழு பரிந்துரை.

* தெலங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கம்: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை பிரதிநிதித்துவத் திற்கு முக்கியத்துவம் அளிக்க காங்கிரஸ் அரசு முடிவு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *