சென்னை பெரியார் திடலில் தொடங்கக்கூடிய நீட் எதிர்ப்பு

 5 ஆம் அணி இருச்சக்கர வாகன பிரச்சார பரப்புரை பயணத்திற்கு தருமபுரி மாவட்ட எல்லையில் தாைர- தப்பட்டை முழங்க வரவேற்பு – நிறைவு விழாவில் சேலத்தில் பங்கேற்பதென தருமபுரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

தருமபுரி, ஜூலை 3– தருமபுரி மாவட்டத்தை நோக்கி வரக்கூடிய நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரையின் 5 ஆம் குழுவை சிறப்பாக வரவேற்க வேண்டும் என்கிற அடிப்படையில்,தருமபுரி மாவட்டத்தில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்.

30-06-2024 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் பெ.கோவிந்தராஜ் வரவேற்பு நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமை ஏற்றார்.

ஊமை.ஜெயராமன் தலைமைக் கழக அமைப்பாளர் சிறப்புரையாற்றினார்.

மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர், மாரி.கருணாநிதி மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் ஆகியோர் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தின் பயணங்கள் குறித்தும், வரக்கூடிய தோழர்களுக்கான உணவு, தங்கும் இடம், சிறப்பான வர வேற்பு கொடுப்பது ஆகியவற்றை பற்றி எடுத்து ரைத்தார்கள்.

க.கதிர் பொதுக்குழு உறுப்பினர், கதிர்.செந்தில்குமார் ப.க. மாவட்டத் தலைவர், இளைய.மாதன் துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாவட்டக் கழகக் காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், நகரத் தலைவர் கரு.பாலன், வீ.சிவாஜி, தொழிலாளரணி மாவட்டத் தலைவர் பெ.மாணிக்கம், தொழி லாளரணி செயலாளர் மு.சிசுபாலன், ப.க. இர.கிருஷ்ணமூர்த்தி, ப.க. அன்பரசு, இளை ஞரணி பேராசிரியர் கண்.இராமச்சந்திரன், பாப்பாரப்பட்டி சுந்தரம், விவசாய அணி ஊமை.காந்தி, நூலக வாசகர் மாதேஸ், நூலக வாசகர் கோவிந்தன், கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை நிகழ்விற்கு உரிய காவல்துறை அனுமதி வாங்குவது,

ஜூலை 11-07-2024 அன்று சென்னை பெரியார் திடலில் தொடங்கக்கூடிய 5 ஆம் அணி நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வெகு சிறப்பாக மாவட்ட எல்லையான வெள்ளிச்சந்தையில் 14-07-2024 அன்று தாைர, தப்பட்டைகளுடன் பெருந்திரளான தோழர்களுடன் வரவேற்று மகிழ்வது,

வாகன பரப்புரையில் வரும் கருஞ்சட்டை தோழர்களுக்கு பாப்பாரப்பட்டியில் மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன் தலைமையில் மற்றும் பாப்பாரப்பட்டி நகரக்கழகம் இணைந்து சிறப்பான மதிய உணவு வழங்குதல், 14-07-2024 அன்று மாவட்டத் தலைவர் தலைமையில் வாகன பரப்புரை தோழர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்தல்,
15-07-2024 அன்று வீ.சிவாஜி தலைமையில் வாகன பரப்புரை தோழர்களுக்கு காலை உணவு ஏற்பாடு செய்தல்,
நிறைவாக சேலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் தலைமையில் நடைபெறும் நிறைவு விழாவில், தருமபுரி மாவட்ட சார்பாக பெருந்திரளான தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கப்படும் என்கிற உற்சாகத்தோடு இக்கூட்டம் நிறைவுபெற்றது.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *