ஈரோடு ஹாஜிரா பீபீ மறைவு கழகத் தலைவர் தொலைபேசியில் ஆறுதல்

1 Min Read

ஈரோடு பெரிய அக்ரகாரம் டி.முகமது இஸ்மாயில் அவர்களின் வாழ்விணையர் ஹாஜிரா பீபீ (வயது 85) 30.6.2024 அன்று உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

அம்மையாரின் உடல் 1.7.2024 அன்று ஈரோட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தலைமை கழக அமைப்பாளர் த.சண்முகம் மூலமாக செய்தி அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் மறைந்த அம்மையாரின் மகன் DMI சாதிக் அலியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தம்முடனும் மிகுந்த பற்றுக் கொண்ட குடும்பம் என்றும், பெரிய அக்ரகாரம் பகுதியில் பலர் இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருந்ததையும், சாதிக் அலியிடம் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

தாம் ஈரோட்டிற்கு வரும்போது இல்லத்திற்கு வருவதாகவும் அவரிடம் தெரியப்படுத்திக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *