இலங்கை மேனாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனார் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

1 Min Read

இலங்கையின் வெகு நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராகவும், ஈழத் தமிழ்ப் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராடிய இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மதிப்புமிகு இரா. சம்பந்தன் அவர்கள் தனது 91ஆம் வயதில் நேற்று (30.6.2024) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், நம்மையும் சந்திக்கத் தவறியதே இல்லை.

எந்த நிலைப்பாட்டிலும், விவாதங்களிலும் நிதானமான போக்கை கடைப்பிடித்தொழுகிய தொண்டறச் செம்மல், மாமனிதர்!

அவரது மறைவு ஈழத் தமிழர்களுக்கு மட்டும் பெரும் இழப்பு அல்ல; சீரிய நீண்ட பொது வாழ்வில் எடுத்துக்காட்டான அவரை மதிக்கும் பிற நாட்டுத் தமிழர் சமூகத்தினருக்கும் பெரும் இழப்பாகும்!

அவரது தமிழரசுக் கட்சிக்கும், குடும்பத்தி னருக்கும் ஆறுதலையும், நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது வீர வணக்கம்!

கி.வீரமணி
சென்னை தலைவர்
1.7.2024 திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *