வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழ்வாய்வு 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

1 Min Read

விருதுநகர், ஜூலை 1- வெம்பக்கோட்டையில் நடந்த 3ஆம் கட்ட அகழ்வாய்வில் 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழ் வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கு வளையல் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன.

மேலும் கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடு மண்ணாலான கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங் கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு, எலும்புகள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அங்கு நடைபெறும் 3ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண் டெடுக்கப்பட்டு உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *