அகமதாபாத், ஜுலை 1- குஜராத் தலைநகர் அகம தாபாத்தில் கனமழைபெய்யத்துவங்கியது இந்த மழையில் நகரில் அதிமுக்கிய பகுதிகளான சயின்ஸ் சிட்டி மற்றும் கோட்டா வெள்ளத்தில் மூழ்கின.
மழைநீர் வழிய வழி இல்லாததால் தேங்கிய சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.
விமான நிலையத்தில்
வெள்ளம்
காந்திநகர் வைஷ்ணோ தேவி மற்றும் நிர்மா பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலை. வைஷ்ணோ தேவி மேம்பாலம் மற்றும் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
சர்தார் வல்லபாய் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் அதனைத் சுற்றியுள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று (30.6.2024) மாலை முதலே உள்ளூர் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குஜராத்தில் வடமேற்கு பருவமழை துவங்கியது முதல் ஒட்டுமொத்த அகமதாபாத் நகரமும் வெள்ளத்தால் நிலைகுலைந்துவிட்டது.
ஜூலை 5 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.