முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைத்தது ஏன்? ஒன்றிய அமைச்சர் நட்டாவுடன் மருத்துவர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை.1- முதுநிலை நீட் தேர்வு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுடன் மருத்துவர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

முதுநிலை நீட் தேர்வு கடந்த 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்ததால், இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இது அந்த தேர்வுக்காக தயாராகி வந்த மருத்துவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அரசின் இந்த முடிவை பல்வேறு எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வந்தன.

இந்த நிலையில் மருத்துவ மனைகளில் தங்கிப் பணிபுரியும் மருத்துவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து பேசினர்.

முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட விவகாரம்தான் இந்த சந்திப்பில் விவாதிக்கப் பட்ட முக்கிய அம்சமாக இருந் தது. அப்போது இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் மருத்துவக்கல்வி மீதான தங்கள் கவலையை நட்டாவுடன் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த தேர்வுக்கான புதிய தேதிகளை உடனடியாக அறிவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மருத்துவர்கள், தேர்வுகளை வெளிபடையாகவும் திறமையாகவும் நடத்துவது குறித்தும் விவாதித்தனர்.

அவர்களிடம் பேசிய நட்டா, மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசும், தனது அமைச்சகமும் உறுதியாக இருப்பதாக கூறினார். மேலும் தற்போதைய தேர்வு முறையை மேம்படுத்தமுடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரி வித்தார்.

முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்க ஏற்பட்ட தேவையை பூர்த்தி செய்து வருவதாகவும், தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகள்

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே நிலுவையில் உள்ள மற்ற முக்கியமான பிரச்சி னைகளையும் இந்த கூட்டத்தில் மருத்துவக் கூட்டமைப்பு பிரதிநிதி கள் எழுப்பினர்.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மேலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்களுக்கு நட்டா உறுதியளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *