எதிர்க்கட்சித் தலைவர் என்பது வலிமையான ஜனநாயகக் கருவி! ராகுல் காந்தி கருத்து

1 Min Read

புதுடில்லி, ஜூலை 1- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி முதல்முறையாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வாகி இருக்கிறார். இந்த பதவியை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளி யிட்டுள்ள காட்சிப் பதிவில்,
‘எதிர்க்கட்சித் தலைவர் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் வலிமையான ஜனநாயகக் கருவி ஆகும். உங்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முழுவலிமையுடன் எழுப்புவேன் என உறுதியளிக்கிறேன்’ என குறிப்பிட்டி ருந்தார். மேலும் அந்த காட்சிப்பதிவில் மாணவர்களுடன் அவர் உரையாடும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. நீட் மறு தேர்வே இளைஞர்களின் கோரிக்கை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த 28ஆம் தேதி அவர் பேசிய காட்சிப் பதிவையும் அதில் இணைத்திருந்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *