யு.சி.ஜி. நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21-இல் தொடங்குகிறதாம்!

2 Min Read

புதுடில்லி, ஜூன் 30 ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்அய்ஆர் யுஜிசி நெட் தேர்வு, என்சிஇடி தேர்வுகளுக்கான புதிய தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 5 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்ததாக மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இந்த வழக்கினை சிபிஅய் விசாரித்து வருகிறது. மேலும் இந்த முறைகேடுகள் காரணமாக தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கோரிக்கை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து வினாத்தாள் கசிவு கார்ணமாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
அதன்பின்னர் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வும், ஜூன் 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த சிஎஸ்அய்ஆர்- யுஜிசி- நெட் தேர்வும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைப்பதாக அறிவிக்கபட்டது.இதனால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், யு.ஜி.சி நெட் மற்றும் சி.எஸ்.அய்.ஆர் யுஜிசி நெட் ஆகிய தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வு – ஆகஸ்ட் மாதம் 21 மற்றும் செப்டம்பர் 4 தேதிகளுக்கிடையே நடைபெறும். (ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சி.எஸ்.அய்.ஆர் யுஜிசி நெட் தேர்வு – ஜூலை 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

என்.சி.இ.டி தேர்வு – ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும். அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவு தேர்வு – ஏற்கெனவே திட்டமிட்டப்படி ஜூலை 6ஆம் தேதி நடைபெறும். இந்த அனைத்துத் மறுதேர்வுகளும் கணினி வழியில் நடைபெற உள்ளது. (ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் 2024 தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *