தாமதமாகும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையால் குழப்பத்தில் மாணவர்கள்

1 Min Read

புதுடில்லி, ஜூன் 29 நீட் முறைகேடு விவகாரத்தால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவா் சோ்க்கை தாமதமாகி வரும் நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில் நடைபெறும் பிற மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜூலை மாதம் தொடங்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் முறைகேடு விவகாரத்தில் நீதிமன்றம், ஒன்றிய அரசு உரிய முடிவு எடுத்த பிறகுதான் மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும். எனவே, முதலில் பி.எஸ்சி. நா்சிங், பி.பார்ம். போன்ற துணை மருத்துவ படிப்புகள், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜூலை மாதத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா். துணை மருத்துவப் படிப்புகளைப் போன்றே கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் ஜூலையில் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *