பாஜகவின் பிரமுகரும் கூலிப்படை கும்பல் தலைவனுமான சீர்காழி சத்யாவை சுட்டுப் பிடித்தது தமிழ்நாடு காவல்துறை

1 Min Read

செங்கல்பட்டு, ஜூன்29- பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், ஒன்றிய தமிழ்நாடு பாஜகவின் பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே காவல்துறையினர் துப்பாக் கியால் சுட்டு பிடித்தனர். பிரபல ரவுடி சீர்காழி சத்யா கடந்த 2021இல் பாஜகவில் இணைந்தார்.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சத்யா உட்படுத்தப்பட்டவர்.
காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடி சத்யாவை ரகசிய தகவல் அடிப்படையில் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், காரில் வந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

அப்போது காவல்துறையினரை தாக்கி விட்டு ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்ப முயன்ற போது காவல்துறையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சுட்டுப் பிடிக்கப்பட்ட சத்யாவிடம் இருந்து ஒரு கைத் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காலில் பலத்த காயம் அடைந்த ரவுடி சத்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *