செங்கல்பட்டு, ஜூன்29- பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், ஒன்றிய தமிழ்நாடு பாஜகவின் பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே காவல்துறையினர் துப்பாக் கியால் சுட்டு பிடித்தனர். பிரபல ரவுடி சீர்காழி சத்யா கடந்த 2021இல் பாஜகவில் இணைந்தார்.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சத்யா உட்படுத்தப்பட்டவர்.
காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடி சத்யாவை ரகசிய தகவல் அடிப்படையில் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், காரில் வந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
அப்போது காவல்துறையினரை தாக்கி விட்டு ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்ப முயன்ற போது காவல்துறையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சுட்டுப் பிடிக்கப்பட்ட சத்யாவிடம் இருந்து ஒரு கைத் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காலில் பலத்த காயம் அடைந்த ரவுடி சத்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.