துறையூர் பாலசுப்ரமணியம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

துறையூர், ஜூன் 29- துறையூர் கழகத் தோழரும், பணி ஓய்வு பெற்ற ஆசிரியரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான பாலசுப்ரமணியம் நேற்று (28.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
துறையூர் மாவட்ட கழகத் தலைவர் ச. மணிவண்ணன்.

மாவட்ட இளைஞரணி தலைவர் செயலாளர், அமைப்பாளர் மற்றும் தோழர்கள் செ. செந்தில்குமார், த.ரஞ்சித், பா.பாரதி, ச.மகாமுனி மற்றும் புதிய வீட்டு வசதி வாரிய கிளைக் கழகத் தோழர்கள் கோர்ட் பெ.பாலகிருஷ்ணன், கோர்ட் எம்.ஆர்.சந்திர போஸ், கோட்டாத்தூர் கழகத் தோழர் ரவிக்குமார் என்கிற கதிரிளவன், துறையூர் ஒன்றிய விசிக செயலாளர் மொழி, சிவா ஆகியோர் மறைவுற்ற பாலசுப்ரமணியம் உட லுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
அவர் மனைவி பொன்னம்மாள், மகள்கள் அன்பரசி, கலையரசி, மகன்கள் நாத்திகன், உதயசூரியன் மற்றும் குடும்பத்தாருக்கு கழகப் பொறுப்பாளர்கள் ஆறுதல் கூறினர்.
2008 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *