இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம்

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்

புதுடில்லி,ஜூன் 28- இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடு விக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அந்த கடிதத்தில்,
“மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் வந்தது. இலங்கைக் கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்பாக தாங்கள் கடந்த 19,24 மற்றும் 25ஆம் தேதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த 26ஆம் தேதி நிலவரப்படி, 34 இந்திய மீனவர்கள்

இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 6 பேர் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீனவர் பிரச்சினை 1974ஆம் ஆண்டு ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2014ஆம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எப்போதும் அவ்வாறு செய்வோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்” என்று அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *