பாலியல் குற்றவாளி பிரிஜ்பூசன் மீது நடவடிக்கை எடுக்காத மோடி பன்னாட்டு அளவில் இந்தியாவிற்கு அவமானம்

1 Min Read

அரசியல், இந்தியா

புதுடில்லி, ஆக. 25- இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, உலக மல்யுத்த கூட்டமைப்பு நீக்கம் செய்துள்ளது குறித்து திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மஹூவா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், 

“உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாத தால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடை நீக்கம் செய்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் நமது தேசியக் கொடியின் கீழ் விளையாட முடியாது. ஒரு பாலியல் வேட்டையாளர் நாடாளுமன்ற உறுப் பினர் விளையாட்டை தனது காலுக்கு கீழே போட்டு மிதிக்க அனுமதித்த துக்காக பாஜகவுக்கும், ஒன்றிய விளை யாட்டு மற்றும் இளைஞர் நலத் துறைக்கும் அவமானம்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்தத் தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை, உலக மல்யுத்தக் கூட்டமைப்பு நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலை கடந்த ஜூன் மாதம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், மல்யுத்த வீரர் _- வீராங்கனைகள் போராட்டம், பல் வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங் களால் தேர்தல் நடத்துவது தள்ளிப் போனது.

இந்தத் தேர்தல் மூலம் தலைவர் உட்பட 15 நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்தல் கடந்த 12ஆ-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தரப்பு ஆதரவாளர்கள் முக்கிய பொறுப்புகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

கடந்த மே மாதம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடைபெற்ற போது குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக் கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *