தமிழ்நாடு அமைதியான மாநிலம் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

Viduthalai
1 Min Read

பெரம்பலூர், நவ.19 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (18.11.2023) வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கலந்து கொண்டார். 

பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலம். எனவே எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் 2 இடங்களில் இருத்தல், இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இடம்பெற்றிருந்தால் வாக்காளரின் ஒப்புதல் பெற்று அவர் எங்கு வாக்களிக்க விரும்புகிறார் என்பதை எழுத்துப்பூர்வமாக பெற்ற பிறகு மற்றொரு இடத்தில் பெயர் நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *